சிங்கப்பூர் ஹெண்டர்சன் சாலை பிளாக்கில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை.!

Mandatory testing Henderson road
Pic: Google Maps

சிங்கப்பூர் ஹெண்டர்சன் சாலை (Henderson Road) பிளாக் 91-ல் வசிக்கும் 3 குடும்பங்களில், 5 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹெண்டர்சன் சாலையில் உள்ள பிளாக் 91-ல் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் கட்டாய COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு இன்று (30-06-2021) மற்றும் நாளையும் (ஜூலை 01) கிருமித்தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகளை தளர்த்த அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்; அமைச்சர் திரு வோங்.!

மேலும், ஹார்பர் ஃபிரண்ட்டில் (HarbourFront) உள்ள VivoCity, HarbourFront Centre ஆகிய இரண்டு கடைத்தொகுதிகளில் பணிபுரியும் ஊழியர்களும், வாடகைதாரர்களும் கட்டாய COVID-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஹெண்டர்சன் கிரெசண்ட் பிளாக் 103-ல் உள்ள குடியிருப்பாளர்களுக்கும், லெங்கோக் பாரு பிளாக் 55, 56, 57 குடியிருப்பாளர்கள், கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று (ஜூன் 30)  வரை கட்டாய கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

‘போதைப்பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த இளைஞருக்கு சிறை, பிரம்படிகள்’- நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!