மே தினம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு 3,000 பீட்சாக்களை வழங்கும் Pizza Hut ..!

Pizza Hut: May Day gift giving pizza to foreign workers
Pizza Hut: May Day gift giving pizza to foreign workers

சிங்கப்பூரில் உள்ள Pizza Hut நிறுவனம் மே தினத்தை முன்னிட்டு சிறப்புப்பரிசாக வெளிநாட்டு ஊழியர்களுக்கு 3,000 பீட்சாக்களை வழங்குகிறது.

COVID-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக Pizza Hut குறிப்பிட்டது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவானது இயல்பை விட அதிகமாக இருக்கும்..!

முதலில் 2,000 பீட்சாக்களை மட்டுமே வழங்க இருந்ததாகவும், அதன் பிறகு அந்த எண்ணிக்கையை 3,000-க்கு உயர்த்தியதாகவும் Pizza Hut நிறுவனம் தெரிவித்தது.

இந்த முயற்சியின் மூலம், சிங்கப்பூருக்குத் தங்களது கடின உழைப்பைக் கொடுத்துப் பங்களிகும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புவதாக Pizza Hut நிறுவனம் குறிப்பிட்டது.

Source: seithi

இதையும் படிங்க: COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 932 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!