சிங்கப்பூரில் முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவானது இயல்பை விட அதிகமாக இருக்கும்..!

Warm, wet weather expected for first half of May: Met Service
Warm, wet weather expected for first half of May: Met Service

சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்தில் நிலவிய வெப்பமான வானிலை மே முதல் பாதியிலும் தொடரும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் (ஏப்ரல் 30) ​​தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரில் பெரும்பாலான பகுதிகளில், மே முதல் இரண்டு வாரங்களுக்கு மழைப்பொழிவானது இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் புதிதாக 932 பேர் கிருமித்தொற்றால் பாதிப்பு..!

மேலும், இந்த காலகட்டத்தில் வெப்பநிலை சில நாட்களில் 35 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும்.

மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் பிற்பகல் வேளையில் எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு ஏப்ரல் ஒரு வெப்பமான மாதமாக இருந்தது, ஏனெனில் பெரும்பாலான நாட்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை எட்டியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 12 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம்..!