மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, ஜூலை 5- ஆம் தேதி அன்று சிங்கப்பூர் வந்துள்ள தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் பார்க் ஜின்னுக்கு (Republic of Korea Minister Park Jin) சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று (06/07/2022) இரவு விருந்து அளித்தார்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது லாரி மோதி விபத்து
கடந்த ஜூலை 5- ஆம் தேதி அன்று மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள தென்கொரிய வெளியுறவுத்துணை அமைச்சர் பார்க் ஜின், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
அப்போது, தென்கொரிய அமைச்சர் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் ஆகியோர் இரு தரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சிகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதேபோல், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின் போது, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகள், டிஜிட்டல் மயமாக்கல் (Digitalisation), ஃபின்டெக் (Fintech) மற்றும் சப்ளை செயின் (Supply chain resilience) பின்னடைவு போன்ற துறைகள் குறித்து பயனுள்ள விவாதம் நடத்தினர். வலுவான ஆசியான் மற்றும் தென் கொரிய உறவுகளை (ASEAN-ROK) மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு அமைச்சர்களும் கொரிய தீபகற்பம் உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.
இதனிடையே, தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இரவு உணவு விருந்து அளித்து உபசரித்தார் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்.