கடந்த நவம்பர் 10ஆம் தேதி அன்று, துவாஸை நோக்கிய அயர் ராஜா அதிவேக நெடுஞ்சாலையில் (AYE) நடந்த ஒரு விபத்தில் 28 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
பேஸ்புக் பதிவின் (நவம்பர் 11) படி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஃபுட்பாண்டா (Foodpanda) பை இணைக்கப்பட்ட ஒரு சிவப்பு பைக்கில் சென்றுகொண்டிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வாட்ஸ்அப் வழியாக ஆள்மாறாட்ட மோசடி – புலனாய்வு பிரிவு எச்சரிக்கை
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு (NUH) அருகிலுள்ள நெடுஞ்சாலையில் Buona விஸ்டாவில் இருந்து வெளியேறிய பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேஸ்புக் பதிவு
இந்த சம்பவம் தொடர்பான தகவல் வேண்டி பேஸ்புக்கில் ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், 2020 நவம்பர் 10 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 – 4.30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர மோட்டார் சைக்கிள் (FBK7687R) விபத்து தொடர்பான தகவல் (சாட்சிகள், வீடியோக்கள், படங்கள்) உள்ளவர்களிடம் மனதார வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
NUHக்கு வெளியே Buona விஸ்டாவில் இருந்து வெளியே AYE நெடுஞ்சாலையில் (துவாஸை நோக்கி) இந்த விபத்து நிகழ்ந்தது. உங்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால் தயவுசெய்து தகவல் தாருங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பேஸ்புக் பதிவைப் பதிவேற்றிய நபர் இறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் மனைவி என்று ஸ்டாம்ப் தெரிவித்துள்ளது.
விசாரணை
28 வயதான அந்த ஓட்டுநர், சம்பவ இடத்தில் இறந்ததாக துணை மருத்துவரால் அறிவிக்கப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
கொரோனா: சிங்கப்பூரில் தொடர்ந்து 8வது நாளாக சமூக பரவல் இல்லை
சிங்கப்பூருக்கு வெளிநாட்டு தொழில்நுட்ப திறமைகளை ஈர்க்க உதவும் புதிய வேலை அனுமதி – பிரதமர் லீ