சிங்கப்பூரில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!

Pic: Today/File

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக நேற்று (செப்டம்பர் 10) 80 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று காரணமாக மரணமடைந்த 80 வயது சிங்கப்பூரரான அவர், முதல் டோஸ் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டிருந்தார் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் தனிப்பட்ட கடன் உயர்வு!

கடந்த செப்டம்பர் 4ம் தேதியன்று அவருக்கு அறிகுறிகள் தென்பட்டது என்றும், ஐந்து நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 9ம் அன்று தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு மையத்தில் அவர் சேர்க்கப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கை தற்போது 58ஆக உயர்ந்துள்ளது.

வருமானம் இன்றி தவித்த “லிட்டில் இந்தியா”…. விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் வருகை செய்தியால் மகிழ்ச்சி