PCF Sparkletots பாலர் பள்ளியில் இரு குழந்தைகளுக்கு தொற்று உறுதி.!

PCF Sparkletots childrens covid

சிங்கப்பூரின் பிடோக் நார்த்தில் (Bedok North) உள்ள PCF Sparkletots பாலர் பள்ளியில் பயிலும் 2 குழந்தைகளுக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அந்த தகவல் இடம் பெற்றிருந்ததாக CNA தெரிவித்துள்ளது.

1.295 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனையான பிஷன் வீவக வீடு!

PCF Sparkletots பாலர்பள்ளியில் பயிலும், இரு குழந்தைகளும் உடன்பிறந்தவர்கள் என்றும், பள்ளிக்கு அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்றிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பிடோக் நார்த்தின், பிளாக் 115 Fengshan-ல் உள்ள அந்த பாலர் பள்ளியில் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள நேற்று முன்தினம் (ஜூலை 30) மூடப்பட்டது. அங்கு தொடர்புத் தடங்களைக் கண்டறியும் பணிகளும் தொடர்கின்றன.

PCF Sparkletots பாலர்பள்ளியில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்ற குழந்தைகள், பள்ளி ஊழியர்களும் தனிமைப்படுத்தப்படுவர் என்றும், மற்றவர்களுக்கு பள்ளி நாளை (ஆகஸ்ட் 02) முதல் வழக்கம் போல் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் விரைவில் அமையவிருக்கும் 2 புதிய இயற்கை பாதைகள்.!