சிங்கப்பூரில் மேலும் எட்டு பேர் மருத்துவமனைகள் அல்லது சமூக பராமரிப்பு வசதிகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.
இதையும் சேர்த்து சிங்கப்பூரில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 57,341ஆக உயர்ந்துள்ளது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து பயணிகள் எடுக்கும் COVID-19 சோதனைகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களாக இருக்க வேண்டும் – MOH
மருத்துவமனையில் 29 நபர்கள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர்.
லேசான அறிகுறிகளைக் கொண்ட அல்லது மருத்துவ ரீதியாக நன்றாக உள்ள, 268 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சமூக வசதிகளில் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்றுநோய் காரணமாக 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தற்போதைய நிலவரப்படி 57,665 நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்து தனிமைப்படுத்தப்பட்டவரின் மரணம் – நீடிக்கும் மர்மம்..!