COVID-19 தொடர்பாக சிங்கப்பூரில் பரவும் பொய்யான வதந்திகள்..!

Rumors spread in Singapore over COVID-19 ..!
Rumors spread in Singapore over COVID-19 ..!

சிங்கப்பூரில் COVID-19 சூழலில் அது தொடர்பான பொய்யான வதந்திகள் பரவிவருவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

அதில் மூன்று வதந்திகள் குறித்து அது குறிப்பிட்டுள்ளது.

  • சிங்கப்பூர் DORSCON சிவப்பு நிலைக்கு மாறும்
  • அதே போல் சிங்கப்பூர் முடக்கக்கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்
  • மேலும், சிங்கப்பூரில் பேருந்து, ரயில் சேவைகள் குறைக்கப்படும் / நிறுத்தப்படும்

இவை அனைத்தும் உண்மையல்ல என்பதை அது உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைத் தயவுசெய்து பரப்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

உண்மையான தகவல்களை பெற சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ தளங்களை நாடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Gov.sg வாட்ஸ்ஆப் சேவை பெற: go.gov.sg/whatsapp

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு தொற்று உறுதி; புதிதாக சிங்போஸ்ட் சென்டரில் 3 பேர் பாதிப்பு..!