சிங்கப்பூரில் புதிதாக 2 நோய்த்தொற்று பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, Dempsey வட்டாரத்தில் உள்ள Samy’s Curry உணவகம். இதனுடன் தொடர்புடைய எட்டுப் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Dempsey வட்டாரத்தில் வசிப்போர்கள் இரண்டு வாரங்களுக்கு தங்கள் உடல் நிலையை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று காரணமாக பெண் மரணம்.!
மேலும், புதிதாக கண்டறியப்பட்ட இரண்டாவது குழுமத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதுகுறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
நோய்த்தொற்று பரவலை தடுக்கவும், கிருமிநீக்கம் பணிகளை மேற்கொள்ளுவதற்கும் இன்று (ஜூலை 25) முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை Samy’s Curry உணவகம் மூடப்பட்டிருக்கும்.
Samy’s Curry உணவகத்திலுள்ள ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த மாதம் 19ம் தேதியில் இருந்து 23ம் தேதி வரை அங்கு சென்று திரும்பியவர்கள் இலவசமாக கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
சோதனை நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் அறிய MOHஇன் வலைத்தளத்தைப் பார்க்கலாம்.
கடல் உணவுகளின் தேவைகளை பூர்த்திசெய்ய பேரங்காடிகள் விரைவாக செயல்பட்டுள்ளது; அமைச்சர் கிரேஸ் ஃபூ.!