சிங்கப்பூரில் மேலும் 1,931 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Photo: Ooi Boon Keong/TODAY)

சிங்கப்பூரின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (20/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (20/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,931 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 1,925 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சமூக அளவில் 1,867 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 58 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,50,518 ஆக உயர்ந்தது.

ஊழியர்களை ஏற்றிச்செல்ல லாரிக்கு பதில் மினிபஸ்: இதுவரை 25 நிறுவனங்கள் கையெழுத்து!

கொரோனா பாதிப்பால் மேலும் 13 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரின் வயது 62 முதல் 98 வரை ஆகும். இதனால் சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,367 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 199 பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 100 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வணிக ரீதியான பயணிகள் விமானங்கள்… இந்தியாவுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை

கடந்த நாளில் 2,533 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 349 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.