சிங்கப்பூர்: COVID -19 தொற்றுநோயை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சில்க் ஏர் (SILK AIR) ஆகியவற்றில் பயணிக்கும் பயணிகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி முதல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சில்க் ஏர் (SILK AIR) விமானங்களில் பயணிப்பவர்கள் அனைவரும் தங்கள் முகக்கவசங்களைக் கொண்டு வந்து அணிய வேண்டும் என்று சனிக்கிழமை (மே 9) தனது இணையதளத்தில் ஒரு ஆலோசனையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) தெரிவித்துள்ளது.
விமானத்திற்குள் செல்லும்போதும், விமானத்திலிருந்து வெளியேறும்போதும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். இது சிங்கப்பூரின் சிவில் ஏவியேஷன் ஆணையத்தின் உத்தரவு என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 876 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!
சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு அடிப்படை சுகாதார மதிப்பீட்டை மேற்கொள்வார்கள், இதில் வாய்மொழி சுகாதார அறிவிப்பு மற்றும் வெப்பநிலை சோதனைகள் அடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவுக்கான விமானச்சேவைகளில் உணவு சேவைகள் நிறுத்தப்படும். அதற்கு பதிலாக பயணிகள் ஏறும் போது தண்ணீர் மற்றும் சிற்றுண்டி கொண்ட சிற்றுண்டி பை வழங்கப்படும். தென்கிழக்கு ஆசியா மற்றும் சீனாவுக்கான விமானச்சேவைகள் தவிர மற்ற எல்லா விமானங்களுக்கும் உணவு வழங்கப்படும்.
மார்ச் மாத இறுதியில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மற்றும் சில்க் ஏர் (SILK AIR) ஒருங்கிணைந்த பயணிகள் திறனை ஏப்ரல் இறுதி வரை 96 சதவீதம் குறைக்கப்போவதாக அறிவித்தது. தொடர்ச்சியான உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், விமான ரத்துசெய்தல் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அனைத்து அன்னையருக்கும் “அன்னையர் தின” வாழ்த்து கூறிய பிரதமர் லீ..!