சிங்கப்பூரில் மேலும் 2,038 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று!

Photo: Today

சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (18/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (18/11/2021) மதியம் நிலவரப்படி, 2,038 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,031 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில், சமூக அளவில் 1,964 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 67 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,46,853 ஆக உயர்ந்துள்ளது.

குடியிருப்பில் இறந்து கிடந்த ஆடவர்: இறந்து சில நாட்களாகியிருக்கலாம் – காவல்துறை

கொரோனா பாதிப்பால் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். சிங்கப்பூரில் கொரோனா மொத்த உயிரிழப்பு 625 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,435 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 226 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 113 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மலேசியா-சிங்கப்பூர் விமான சேவை: 6 விமான நிறுவனங்கள் வழங்கும் – அனுமதி விண்ணப்பம் எப்போது?

கடந்த நாளில் 3,772 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 528 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.