சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (16/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (16/11/2021) மதியம் நிலவரப்படி, புதிதாக 2,069 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் 2,064 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 2,021 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 43 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,41,341 ஆக உயர்ந்துள்ளது.
கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்த இந்திய ஊழியர் மரணம்
கொரோனா பாதிப்பால் மேலும் 18 பேர் உயிரிழந்த நிலையில், சிங்கப்பூரில் மொத்த கொரோனா உயிரிழப்பு 612 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,501 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 234 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 122 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 54 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது; மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கிளமென்டி பகுதியில் பூனையை விழுங்கிய மலைப்பாம்பு!
கடந்த நாளில் 2,361 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 363 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.