சமுக அளவிலான தொற்று: ஒருவருக்கு புதியவகை தொற்றுக்கான ஆரம்ப கட்ட அறிகுறி..

Singapore COVID-19 B117 strain
(PHOTO: Suhaimi Abdullah/Getty Images)

சிங்கப்பூரில் நேற்று, சமூக அளவில் இருவருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது, அவர்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

முதல் நபர், தென் கொரியாவிலிருந்து வந்த work permit வைத்திருக்கும் 24 வயது ஆடவர்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தயாராகும் சிங்கப்பூர்!

கடந்த ஜனவரி 2ம் தேதி வழக்கமான சோதனையின் போது அவருக்கு தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு B117 எனப்படும் புதியவகை தொற்றுக்கான ஆரம்ப கட்ட அறிகுறி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அதனை உறுதிப்படுத்தும் சோதனைகள் நிலுவையில் உள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது.

சமூக அளவில் பாதிக்கப்பட்ட மற்றொரு நபர், 31 வயதான பிலிப்பைன் நாட்டவர், கடந்த டிசம்பர் 4ஆம் தேதி பிலிப்பைன்ஸிலிருந்து இங்கு வந்தார்.

மேலும், கடந்த டிசம்பர் 18 வரை வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை பிரத்யேக வசதியில் நிறைவேற்றினார்.

ஜன்னல் விளிம்பில் நின்ற சிறுவனை காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு விருது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…