சிங்கப்பூரில் மேலும் 11 பேர் கிருமித்தொற்றில் இருந்து மீண்டு மருத்துவமனைகள் அல்லது சமூக தனிமைப்படுத்தும் வசதிகளிலிருந்து வீடு திரும்பினர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றில் இருந்து குணமடைத்தோரின் மொத்த எண்ணிக்கை 57,924ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் 300,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கண் பராமரிப்பு திட்டம்.
மருத்துவமனையில்..
மேலும், மருத்துவமனையில் இன்னும் 46 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் சீராகவும் அல்லது உடல்நலம் தேறியும் வருகின்றனர்.
அதே போல, யாரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையில் இல்லை என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேசான அறிகுறி
மற்ற 21 பேர், லேசான அறிகுறி அல்லது மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளனர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சமூக வசதிகளில் பராமரிக்கப்படுகின்றனர்.
உயிரிழப்பு
சிங்கப்பூரில் இதுவரை COVID-19 நோய்த்தொற்று காரணமாக இருபத்தெட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 58,019 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.