சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுகின்றன.
சமூக ஒன்று கூடல் உச்ச வரம்பு எட்டு பேரிலிருந்து 5ஆக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலையிடங்களுக்கு செல்லும் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் தீவிரம்
இந்த புதிய கட்டுப்பாடு மே 8 முதல் மே 30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வீடுகளுக்கும் பொருந்தும், நாள் ஒன்றுக்கு 5 பேர் மட்டுமே வருகைதர முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமும் அதிகபட்சம் இரண்டு சமூக ஒன்றுகூடல் மட்டுமே இருக்க அறிவுறுத்தப்படுவதாக என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.