சிங்கப்பூர் அமைச்சருக்கு விருந்து வைத்து அசத்திய தமிழக அமைச்சர்!

Photo: Office Of PTR official Twitter Page

கடந்த டிசம்பர் 13- ஆம் தேதி அன்று தமிழகம் வந்திருந்த சிங்கப்பூரின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், மதுரைக்கு சென்றிருந்தார். அப்போது, தமிழக நிதித்துறை மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்களை, மதுரை மாவட்டம், பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்தித்தார்.

மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நாமக்கல் முட்டைகள்!

முன்னதாக, வீட்டின் வாசலுக்கு சென்ற தமிழக அமைச்சர், சிங்கப்பூர் அமைச்சரை கைக்குலுக்கி வீட்டிற்குள் அழைத்து வந்தார். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அமைச்சர் மற்றும் அவருடன் வந்த அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தமிழக அமைச்சர் மதிய உணவு விருந்தளித்தார்.

Photo: Office Of PTR official Twitter Page

அதைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள உலக பிரசித்திப் பெற்ற மீனாட்சியம்மன் கோயிலுக்கு சிங்கப்பூர் அமைச்சரை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அழைத்துச் சென்றார்.

கெந்திங் மலை அருகே நிலச்சரிவு: மூன்று சிங்கப்பூரர்களை மீட்ட மலேசிய அதிகாரிகள்!

அங்கு சிங்கப்பூர் அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மீனாட்சியம்மனை அவர் தரிசனம் செய்தார். அவருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.