சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று (22/11/2021) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், “சிங்கப்பூரில் நேற்று (22/11/2021) மதியம் நிலவரப்படி, மேலும் 1,461 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் மிகக் குறைவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை ஆகும்.
தனது மனைவிக்கு விலையுயர்ந்த iPhone வாங்கி கொடுக்க விருப்பம் – நிறைவேற்றி காட்டிய ஊழியர்
கடந்த செப்டம்பர் மாதம் 25- ஆம் தேதிக்கு பிறகு, சிங்கப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500- க்கு கீழே குறைவது இதுவே முதல் முறை. உள்ளூர் அளவில் 1,455 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சமூக அளவில் 1,415 பேருக்கும், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் 40 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த ஆறு பேருக்கும் நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,53,649 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 61 முதல் 105 வயத்துக்குட்பட்டவர்கள் ஆவர். சிங்கப்பூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 667 ஆக அதிகரித்துள்ளது.
ஆசியான்- சீனா சிறப்பு உச்சி மாநாட்டில் சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,421 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 204 பேருக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 92 பேர் ஐ.சி.யூ.வில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
கடந்த நாளில் 2,127 நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 321 பேர் 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் ஆவர்.” இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.