புதிதாக 100 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று – பெரும்பாலோர் வேலை அனுமதி வைத்திருப்பவர்கள்..!

Singapore reports 41 new COVID-19 cases
Singapore reports 41 new COVID-19 cases

சிங்கப்பூரில் நண்பகல் (ஆகஸ்ட் 18) நிலவரப்படி, புதிதாக 100 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 55,938ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிப்பு – புதிய தரமான வேலைகளை உருவாக்க அதிக நேரம் கொடுக்கும்..!

புதிய சம்பவங்களில், ஒருவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் சிங்கப்பூரர் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் என்றும், சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில், பெரும்பாலோர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலை ஆதரவுத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg