சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 உறுதி; மொத்தம் 400ஐ தாண்டியது..!

சிங்கப்பூரில் புதிதாக 47 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 21) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 432ஆக உயர்ந்துள்ளது. மேலும் முதல் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இருவர் நோய்த்தொற்று காரணமாக உயிரிழப்பு..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 140ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 290 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 39 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

மேலும் 2 பேர் முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவரோடு தொடர்புடையவர்கள்.

மேலும் 6 பேருக்கு மேற்குறிப்பிட்ட எதனுடனும் தற்போது தொடர்பில்லை என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பரவும் அபாயத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள்..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil