சிங்கப்பூரில் ஒரே நாளில் புதிதாக 54 பேருக்கு COVID-19 தொற்று உறுதி; மொத்தம் 500ஐ தாண்டியது..!

Singapore reports 54 new COVID-19
Singapore reports 54 new COVID-19

சிங்கப்பூரில் புதிதாக 54 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (மார்ச் 23) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா சம்பவங்கள் உறுதிப்படுத்தப்பட்டதில் இருந்து, தினசரி சம்பவங்களில் இந்த எண்ணிக்கை தான் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 21,200க்கும் மேற்பட்டோருக்கு வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு – ICA..!

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 509ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 152ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 355 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மேலும், 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். ஏற்கனவே இருவர் உயிரிழந்துள்ளனர்.

புதிய சம்பவங்கள்

புதிய சம்பவங்களில், 48 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்று MOH குறிப்பிட்டுள்ளது, இதில் 34 பேர் UK பயணம் செய்தவர்கள்.

மேலும் 6 புதிய நபர்களுக்கு எதனுடனும் தொடர்பு கண்டறியப்படவில்லை என்று MOH குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: 49 இடங்களுக்கு தற்காலிகமாக சேவையை நிறுத்திய ஸ்கூட் – பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியல்..!