சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதனை அடுத்து வழக்கமாக மேற்கொள்ளப்படும் சோதனையை பயணிகளிடம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டனர்.
அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் இலவச COVID-19 தடுப்பூசி; ஆனால் கட்டாயமில்லை – பிரதமர் லீ
அந்த சோதனையின்போது விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கௌதம் (25) என்ற பயணி, பேஸ்டுடன் கலந்து தங்கத்தை தனது உள்ளாடையில் மறைத்து வைத்தது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து, தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், பேஸ்டிலிருத்து தங்கத்தை தனியே பிரித்தெடுத்தனர். அதில் 909 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த தங்கத்தின் இந்திய மதிப்பு 45.78 லட்சம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது செய்தனர்.
மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில் சுமார் 450,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொடர்பு கண்டறியும் சாதனங்கள்!
சிங்கப்பூர் 3ஆம் கட்டம்: வெளிநாட்டு ஊழியர்களுக்கு…!