தரையில் கீழே இரத்த தடங்களுடன் கிடந்த ஆடவர் – காவல்துறை விசாரணை

Singapore Whampoa man blood
(Photo: Irene Ho/Facebook)

சிங்கப்பூரில் Whampoa ஹாக்கர் நிலையத்தில், தரையில் கீழே இரத்தக்கரையுடன் கிடந்த ஆடவர் ஒருவர் நேற்று (டிச.1) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்படி, அந்த நபர் கையில் காயம் ஏற்பட்டு இருந்ததாக தெரிகிறது.

சிங்கப்பூரில் இன்று மூன்று பள்ளிவாசல்கள் தற்காலிகமாக மூடல்!

மேஜை, நாற்காலிகள் மற்றும் தரையில் இரத்தத் தடங்கல் காணப்பட்டன, அதனை ஒருவர் சுத்தம் செய்வதை காணமுடிவதாக Stomp தெரிவித்துள்ளது.

Photo Via Irene Ho/FB

காவல்துறை விசாரணை

இதில் 29 வயதான ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது, அவர் சுயநினைவாக இருந்தார் என்றும் கூறியுள்ளது.

அதிகாலை 1:13 மணிக்கு 90 Whampoa டிரைவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் இந்த மாதத்தில் முதல் 2 வாரங்களின் வானிலை எப்படி இருக்கும்?

இந்த மாதத்திற்கான இந்தியா–சிங்கப்பூர் இருவழி விமான முன்பதிவுகள் தொடக்கம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…