சிங்கப்பூரில் இருந்து திருமணத்திற்காக தமிழகம் வந்த இளைஞரின் வீட்டில் 74 சவரன் நகை, 6 லட்சம் கொள்ளை..!

Singapore workers Tamilnadu theft
(Photo: Nakkheeran)

சிங்கப்பூரில் இருந்து திருமணத்திற்காக தமிழகம் வந்த இளைஞரின் வீட்டில் 74 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மணி, இவரின் மகன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து தனது திருமணத்திற்காக சொந்த ஊரான ஆலம்பாடி வந்துள்ளார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து திருச்சி, மதுரை செல்லும் விமானங்களுக்கான முன்பதிவு – தமிழக பயணிகளுக்கு ஆலோசனை..!

கடந்த 18ஆம் தேதி மணியின் வீட்டில், மர ஜன்னலை அறுத்து பின் வாசல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். பிரோவில் இருந்த 74 சவரன் தங்க நகைகள் மற்றும் 6 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

மணி தனது மகன் திருமணத்திற்காக தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை வீட்டில் வைத்திருந்தாக கூறப்படுகிறது.

இதேபோல் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் ராம்குமார் என்பவரது வீட்டின் பின்புற ஜன்னலை உடைத்து, பீரோவை வயலுக்கு எடுத்துச் சென்று அதில் இருந்த 37 சவரன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இரு வீடுகளிலும் இருந்து, மொத்தம் 111 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.7 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் கவனத்திற்கு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…