ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பன் அஷ்டாக்ஷர கோபால மந்த்ர மஹா யாகம் நடைபெறும் என அறிவிப்பு!

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பன் அஷ்டாக்ஷர கோபால மந்த்ர மஹா யாகம் நடைபெறும் என அறிவிப்பு!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் (Sri Vairavimada Kaliamman Temple), ஸ்ரீ குருவாயூரப்பன் அஷ்டாக்ஷர கோபால மந்த்ர மஹா யாகம் (Sri Guruvayurappan Ashtaakshara Gopala Manthra Maha Yaagam) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

E Pass வேலை அனுமதி விண்ணப்பங்கள்… 43 சதவீத ஊழியர்களுக்கு 3 முறை அனுமதி

இது தொடர்பாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் அக்டோபர் மாதம் 01- ஆம் தேதி சிங்கப்பூரில் ஸ்ரீ வைராவிட காளியம்மன் கோயிலில், ஸ்ரீ குருவாயூரப்பன் அஷ்டாக்ஷர கோபால மந்த்ர மஹா யாகம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 08.00 மணிக்கு சங்கல்பமும், காலை 08.15 மணிக்கு கலச பூஜையும், காலை 08.30 மணிக்கு ஶ்ரீ குருவாயூரப்பன் ஷோடசாக்ஷரி கோபால மந்த்ர மஹா யாகமும், காலை 09.00 மணிக்கு குமார பூஜையும், காலை 09.30 மணிக்கு 5008 லட்டு சமர்ப்பணமும், மஹா பூர்ணாஷுதியும், காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.30 மணிக்கு கலச அபிஷேகமும், காலை 11.15 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படும்.

விமானத்தில் உயிருள்ள சிறுத்தை கெக்கோ பல்லியை கடத்த முயற்சி

அன்றைய தினம் இரவு 07.35 மணிக்கு ஸ்ரீ குருவாயூரப்பன் உபய பூஜையும், இரவு 08.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்படும். வரும் செப்டம்பர் 22- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை லட்டு அர்ச்சனை, அபிஷேக பொருட்கள், துளசி மாலை, கலசாபிஷேகம், லட்டு சம்ர்ப்பணம் மற்றும் பூர்ணாஹூதி தட்டு செலுத்த விரும்புவோர், சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம்.

டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்

கோயில் வளாகத்தில் முகக்கவசம் அணிதல் ஊக்குவிக்கப்படுகிறது; ஆனால் கட்டாயம் இல்லை. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62595238 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.