சிங்கப்பூரில் பள்ளி மாணவர்கள் சார்பில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நினைவுப்பொருள்கள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான பொருள்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை..!
மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான சுமார் 400 படச் சட்டங்கள், எழுதப்பட்ட மடல்கள் ஆகியவை அந்த நினைவுப்பொருட்களில் அடங்கும்.
மேலும் சுமார் 350 வெளிநாட்டு ஊழியர்களுக்கு இந்த பைகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு மாணவர், கடிதத்தில் அவர்களுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினரைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த மாணவர் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளதாக “செய்தி” குறிப்பிட்டுள்ளது.
Source: Seithi MediaCorp
இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை முடிந்தது: MOH