OCBC வங்கியின் ஆன்லைன் சேவைகளுக்கு ஏற்பட்ட தடங்களை கடுமையாக பார்ப்பதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் (MAS) கூறியுள்ளது.
மேலும் ஆணையம், வங்கி மீது மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் 1000ஐ தாண்டிய தொற்று பாதிப்பு – 534 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்
OCBC வங்கி சம்பந்தப்பட்ட சமீபத்திய குறுஞ்செய்தி மோசடிகளை ஆணையம் கடுமையாக பார்க்கிறது. அந்த மோசடிகள் பல வாடிக்கையாளர்களை கணிசமாக பாதித்துள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் வங்கி ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக வங்கி சேவைகளை MAS தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது.
“இந்த மோசடிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் நியாயமாக நடத்தப்பட வேண்டும் என்று MAS எதிர்பார்க்கிறது.”
மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு OCBC பணம் செலுத்தத் தொடங்கியுள்ளது என்பதை கவனிப்பதாகவும் MAS கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களில் S$140,000 இழப்பு – பொதுமக்களுக்கு OCBC வங்கி எச்சரிக்கை