மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா காலமானார்!

Twitter Image

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணாவுக்கு (வயது 79) நேற்று (14/11/2022) திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். ஐசியூ வார்டில் வைத்து கிருஷ்ணாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (15/11/2022) காலை உயிரிழந்தார். அவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்டத் திரையுலக பிரபலங்கள், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.

பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்… தகாத காட்சிகளை பார்த்துகொண்டே தவறாக நடந்த நபர்

குறிப்பாக, தந்தையை இழந்துவாடும் நடிகர் மகேஷ் பாபுக்கு அவரது ரசிகர்கள், திரையுலகினர், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா குறித்து விரிவாகப் பார்ப்போம்!

தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர், 1965- ஆம் ஆண்டுக்கு பிறகு பிரதான ரோல்களில் நடிக்க தொடங்கினார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 350- க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் கிருஷ்ணா செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் மாதத்திற்கு S$2,200 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – பரிந்துரை

கிருஷ்ணாவின் 50 ஆண்டுகால திரைத்துறைப் பயணத்தை கௌரவிக்கும் வகையில், அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட கிருஷ்ணா, 1989- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2022 ஜனவரி 8- ஆம் தேதி அன்று மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு (வயது 56) உடல்நலக்குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 29- ஆம் தேதி அன்று அவரது தாயார் இந்திரா தேவி (வயது 70) காலமானார். இந்த நிலையில், இன்று மகேஷ் பாபுவின் தந்தை காலமாகி இருப்பது தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூர் பிரதமரை நேரில் சந்தித்துப் பேசிய ஜெர்மனி பிரதமர்!

ஒரே ஆண்டில் அண்ணன், தாய், தந்தையை இழந்து தவிக்கும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு, திரையுலகினர் பலரும் அவருக்கும், குடும்பத்தினருக்கும் நேரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.