சிங்கப்பூரில் நண்பகல் (ஜூலை 1) நிலவரப்படி, புதிதாக 215 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
அதாவது தற்போதுவரை, சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 44,122ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வாக்களிப்பு நிலையம் பற்றிய தகவலை சுலபமாக பெறுவதற்கான இணையதளம்..!
புதிய சம்பவங்களில், 10 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அதில் 6 பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்றும், 4 பேர் வேலை அனுமதி பெற்றவர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 4 பேர் இதில் அடங்குவர், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் MOH தெரிவித்துள்ளது.
இதில் அதிகமானவர்கள் தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆவார்கள்.
இந்த புதிய சம்பவங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள், பின்னர் செய்திக்குறிப்பில் பகிரப்படும் என்றும் MOH தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி..!