சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

hong-bao-draw-2024-12-million
Google Maps & Singapore Pools

சிங்கப்பூர் TOTO லாட்டரி குலுக்கள் இன்று (பிப்.23) நடைபெறுகிறது, அதற்கு முதல் பரிசாக S$12 மில்லியன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பு செய்ததை விட முதல் பரிசுத் தொகை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது, ஏனெனில் சிறப்பு குலுக்கல் என்பதால் அதிகமானோர் லாட்டரி வாங்குவார்கள்.

மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன்

லாட்டரி டிக்கெட் மூலமாக மொத்தமாக வசூல் செய்யப்படும் பணத்தில் இருந்து 38 சதவீதத் தொகை முதல் பரிசாக வழங்கப்படும்.

சிங்கப்பூரில் வசித்து வரும் எவரும் இந்த லாட்டரியை வாங்க முடியும், வெளிநாட்டில் இருக்கும் நபர்களால் இந்த லாட்டரி சீட்டை வாங்க இயலாது.

இந்நிலையில், வெளிநாட்டில் உள்ளவர்களின் அதிஷ்டத்தையும் சோதிக்கும் நோக்கில் சிங்கப்பூர் யூடூபர் ஒருவர் வெளிநாடுகளில் வசிக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார்.

கடந்த முறை நடந்த TOTO சிறப்பு குலுக்களில் 100 பேருக்கும், இன்று பிப்.23 நடக்கும் TOTO சிறப்பு குலுக்களில் 120 பேருக்கும் அவர் இலவசமாக டிக்கெட் வாங்கியுள்ளார்.

Easwaran Speaks என்ற அந்த யூடூபர் அதற்கான காணொளிகளை வெளியிட்டு, முதலில் மின்னஞ்சல் அனுப்பும் குறிப்பிட்ட நபர்களுக்கு டிக்கெட் வாங்கினார்.

ஆனால், வெற்றி பெற்றால் முழு தொகையையும் டிக்கெட் வாங்கியவர்களுக்கு கிடைக்காது.

அதற்கு பதிலாக சதவீத அடிப்படையில் பரிசுத் தொகையை தருவேன் என அவர் காணொளியில் கூறியுள்ளார்.

இன்று நடக்கும் குலுக்கலுக்காக அவர் 120 பேருக்கு டிக்கெட் எடுத்து முடித்துவிட்டார்.

இதே போல வேறு சிறப்பு குலுக்கல் நடக்கும்போது மற்றவர்களுக்கும் வாய்ப்பு தருவதாக அவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?