அப்பர் தாம்சன் சாலையில் இரண்டு லாரி மற்றும் கார் விபத்தில் சிக்கியதில் 41 வயதுடைய ஆடவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
நேற்று (நவ.14) காலை 7 மணிக்கு செம்பவாங் சாலையை நோக்கி செல்லும் அப்பர் தாம்சன் சாலையில் நடந்த விபத்து குறித்து தகவல் வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) தெரிவித்தன.
சிங்கப்பூருக்குள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ இத செய்யாதீங்க – சிக்கிய வெளிநாட்டு ஊழியர்
இதில் 54 வயதான லாரி ஓட்டுநர் சிறிய காயங்களுக்கு ஆளானதாக சொல்லப்பட்டது, ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
விபத்தில் சிக்கிய லாரி ஒன்றில் இருந்து உடைந்த முட்டை அட்டைப்பெட்டிகள் சாலையில் சிதறி கிடப்பதை காண முடிந்தது, மேலும் லாரியின் பின்பகுதியிலும் அதிக அட்டைப்பெட்டிகள் காணப்படுகின்றன.
41 வயதுடைய கார் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் கடும் விபத்து: லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்