தடுப்பூசியின் அடிப்படையில் இறப்புகளின் நிகழ்வு விகிதம் வேறுபட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போடாதவர்களில் 100,000 பேருக்கு 79 பேர் இறந்துள்ளனர்.
சினோவாக் தடுப்பூசி போட்டவர்களில் 100,000 பேருக்கு 11 இறப்புகள் பதிவாகியுள்ளது.
அதே போல, சினோபார்ம் போட்டவர்களில் 100,000 பேருக்கு 7.8 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
mRNA தடுப்பூசிகள் போடப்பட்டவர்களைப் பொறுத்தவரை, ஃபைசர்-பயோஎன்டெக் போட்டவர்களில் 100,000க்கு 6.2 ஆகவும், மாடர்னாவுக்கு 100,000க்கு 1 ஆகவும் உள்ளது.
மேலும், இந்த விகிதங்கள், வயது மற்றும் நேரம் போன்ற பிற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், இறப்பை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன, என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 802 பேர் கோவிட் -19 காரணமாக இறந்துள்ளனர், அதில் 555 பேர் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள் என்றும் அமைச்சர் இன்று திங்கள்கிழமை (ஜனவரி 10) குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா செல்லும் பயணியா நீங்க? – தொற்று ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டது “இந்தியா”