கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி..? – சிங்கப்பூரில் நடந்த பகீர் சம்பவம்

Singapore tamil news

அங் மோ கியோவில் தன் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மனைவி செய்ததாக சந்தேகிக்கப்படும் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த டிச.11 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்து அன்று இரவு சுமார் 11.50 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர்.

“நீங்க இந்தியர்… நீங்க மிக மோச**வர்கள்” என்று கொச்சைப்படுத்திய சிங்கப்பூர் ஓட்டுநருக்கு அபராதம்

பெண் ஒருவர் தன் கணவனை கத்தி வைத்து கொண்டு தாக்கியதாக போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கணவர் அடுத்த நாள் டிச.12 அன்று காலமானார்.

இந்நிலையில், மரணத்தை ஏற்படுத்தியதாக அந்த பெண் மீது நேற்று (டிச.13) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

தனது கணவர் தன்னை தானே காயப்படுத்திக் கொண்டதாக 50 வயது சிங்கப்பூரர் பனியா ஷாப் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், தன் கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த தாம் ஜாமீனில் வெளியே வர விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஆனால், கணவருக்கு மரணத்தை ஏற்படுத்தியதாக பனியா மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவரும் அவரது கணவர், 62 வயதான முகமது அலி சபானும், டிசம்பர் 11 ஆம் தேதி இரவு 11.50 மணியளவில், பிளாக் 631, ஆங் மோ கியோ அவென்யூ 4 இன் கீழ் தளத்தில் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரை ஒரு வாரம் ரிமாண்ட் செய்த நீதிமன்றம் வரும் டிசம்பர் 20-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் “வகுப்பு 4 ஓட்டுநர் உரிமம்” உடைய ஊழியர்களுக்கு செம்ம வேலை: சேரும்போதே S$10,000 போனஸ் + மாத சம்பளம் S$5,000

லிட்டில் இந்தியாவில் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ற 33 வயது ஆடவர்.. 10 மணி நேரத்துக்குள் கைது செய்த போலீஸ்