சிங்கப்பூர்: ஜூரோங்கில் உள்ள 138 யுவான் சிங் சாலையில் நடந்த விபத்தில் 12 வயது சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
நேற்று (ஜன.30) நடந்த விபத்தை அடுத்து, மரணம் ஏற்படுத்தியதாக 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Coldplay அதிஷ்ட குலுக்களில் வென்ற வெளிநாட்டு ஊழியர்கள்… மகிழ்ச்சி தெரிவித்து ஆரவாரம்
கவனக்குறைவாக வேனை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தனர்.
ஜூரோங் மேல்நிலைப் பள்ளி மற்றும் யுவபாரதி இன்டர்நேஷனல் பள்ளிக்கு அருகில் இந்த விபத்து நடந்தது.
நேற்று பிற்பகல் 3:50 மணியளவில் இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) உறுதிப்படுத்தியது.
பின்னர், சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதி செய்யப்பட்டது.
மற்றொரு நபர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த வாரம் (ஜன. 23) இன்ஸ்டிடியூஷன் ஹில்லில் உள்ள பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் கார் மோதிய விபத்தில் ஸாரா மெய் ஓர்லிக் என்ற நான்கு வயது சிறுமி பலியானார்.
3 டிரக், 2 கார்கள் மோதி விபத்து.. டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்