குழந்தை சக்கர வண்டியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர்: கண்டித்து விடுப்பில் அனுப்பிய நிர்வாகம்!

bukit-batok-clinic-staff-customer

குழந்தைக்கான சக்கர வண்டியை உதைத்த கிளினிக் ஊழியர் தொடர்பான செய்தியை நாம் முன்னர் வெளியிட்டோம், தற்போது அவர் கண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புக்கிட் பாத்தோக்கில் உள்ள கிளினிக் ஒன்றில் கடந்த திங்கள்கிழமை (ஏப். 18) இரண்டு பெண்கள் இடையே நடந்த கடும் வாக்குவாதம் இணையத்தில் வைரலாகி வந்தது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஊழியர்களிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல் – அதிகாரிகள் அதிர்ச்சி

தனது மகனுடன் இருந்த பெண்ணின் சக்கர வண்டியை, எவர்ஹெல்த் ஃபேமிலி கிளினிக் மற்றும் சர்ஜரியைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கோபத்தில் உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இது வலைத்தள வாசிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஊழியருக்கு, பெண்ணுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தபோது, “பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள்… நாங்கள் சுத்தம் செய்கிறோம்” என்று கண்ணீருடன் தனது தாயைக் கட்டிக்கொண்டு மகன் கெஞ்சுவதையும் வீடியோ வாயிலாக கேட்கலாம்.

மற்றொரு சிசிடிவி வீடியோவில், கிளினிக் உள்ளே வரவேற்பு பகுதியில் தாய்க்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது தெளிவாக தெரிகிறது. ஊழியரை நோக்கி அந்த பெண் பொருளை எறிவதையும் காண முடிந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அந்த கிளினிக் ஊழியரைக் கண்டித்து, விடுப்பில் அவரை அனுப்பியுள்ளதாக கிளினிக் நிர்வாகம் கூறியுள்ளது.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

நகரும் நடைபாதையில் சென்றுகொண்டிருந்த இருவரை பின்னால் இருந்து வேகமாக தாக்கிய டிராலி – வைரல் வீடியோ