உணவு விநியோக பணியில் இருந்தபோது காம்பாஸ் அவென்யூவில் விபத்தில் சிக்கி 24 வயதான டெலிவரி ரைடர் ஜேசன் டான் உயிரிழந்தார்.
கணவனை இழந்து தவிக்கும் அந்த பெண்ணுக்கு ஒரே நாளில் சுமார் S$70,000 க்கும் அதிகமாக நிதி நன்கொடையாக திரட்டப்பட்டுள்ளது.
இறந்தவரின் குடும்பத்தின் சார்பில் Ray of Hope charity தொண்டு நிறுவனத்தால் ஏப்ரல் 12ஆம் தேதி நிதி திரட்டும் முயற்சி தொடங்கப்பட்டது.
தனது பணியில் அதிக ஊக்கத்தொகையைப் பெறுவதற்காக கூடுதலாக 13 ஆர்டர்களை நிறைவேற்ற முயன்றபோது, கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்த விபத்தில் டான் உயிரிழந்தார்.
நன்கொடை இயக்கம் தொடங்கிய முதல் நாளான செவ்வாய்கிழமை இரவு 10 மணிக்குள் சுமார் 150 நன்கொடையாளர்களிடமிருந்து S$7,000 நன்கொடை வந்தது.
தன் கணவனை இழந்து தவிக்கும், மூன்று மாத கர்ப்பிணியான டானின் மனைவிக்கு ஆதரவாக S$200,000 திரட்ட உள்ளதாக நிதி திரட்டும் அமைப்பு நம்பிக்கை கூறியுள்ளது.
இந்த செய்தி பதிவிடும் போது வரை S$124,400 க்கும் அதிக தொகை திரட்டப்பட்டுள்ளது.