பெண் & குழந்தை இறந்த அடுத்த நாளே மேலும் ஒருவர் மரணம் – அச்சத்தில் குடியிருப்பாளர்கள்

Eunos-crescent-second-death-case
Shin Min Daily News / Google Street View

யூனோஸ் குடியிருப்பில் 63 வயதுமிக்க ஆடவர் ஒருவர் இறந்து கிடந்ததாக கூறப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு நாள் முன்பாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் 33 வயது பெண் ஒருவரும், ஒரு வயது குழந்தையும் இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது.

“வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகப்படுத்த முடியாது” – நிறுவனங்களுக்கு அறிவுரை

63 வயதான அந்த ஆடவர் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி இரவு பிளாக் 33 யூனோஸ் கிரசன்ட்டில் மூன்றாவது மாடியில் இறந்து கிடந்தார் என ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

தனியாக வாழ்ந்து வந்த அவர் சீன நாட்டவர் என்றும், அவரை பார்ப்பதே அரிது என்றும் அங்கு குடியிருப்போர் கூறியதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது.

அன்று மாலை 6:40 மணியளவில் இயற்கைக்கு மாறான மரணம் குறித்து தகவல் கிடைத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

அசையாமல் கிடந்த அவரை சோதித்ததில் அவர் இறந்தது சம்பவ இடத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

இதில் ஏதும் சதிச்செயல் நடந்ததாக போலீசார் சந்தேகிக்கவில்லை.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

இரண்டு நாளில் மூன்று இறப்புகள் ஏற்பட்டதால் குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவிப்பதாக ஷின் மின் குறிப்பிட்டுள்ளது.

முதல் சம்பவத்தில், பெண் மற்றும் கைக்குழந்தை ஆகிய இருவரும் கீழே விழுந்து மரணித்தது குறிப்பிடத்தக்கது.

லிட்டில் இந்தியா செல்லும் ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பலத்த சத்தம்.. கீழே விழுந்த பெண் மற்றும் ஒரு வயது குழந்தை – சம்பவ இடத்திலேயே மரணம்