Singapore : ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று (ஆக.16) ஏற்பட்ட தீ விபத்தில் 48 வயதுமிக்க ஆடவர் ஒருவர் இறந்து கிடந்தார் என்ற செய்தியை நேற்று நாம் பதிவிட்டோம்.
அதை தொடர்ந்து அதே வீட்டில் இன்று (ஆக.17) காலை மீண்டும் தீ ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீண்டும் தீபாவளி ஒளியூட்டு: மின்னொளியில் ஜொலிக்க உள்ள லிட்டில் இந்தியா…!
இன்று அதிகாலை 5 மணியளவில் பிளாக் 236 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21ல் உள்ள ஒன்பதாவது மாடியில் நடந்த தீ சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதையும் SCDF உறுதிப்படுத்தியுள்ளது.
வீட்டின் படுக்கையறை ஒன்றின் சிறிய பகுதியில் தீ பற்றியதை கண்டுபிடித்து அதை தண்ணீர் பீச்சியடிக்கும் ஜெட் கருவி மூலம் SCDF அணைத்தது.
விசாரணை தொடர்கிறது.