சிங்கப்பூரில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை..!

Flights from Singapore to india

சிங்கப்பூரிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ், முதல் 5 கட்டமாக தமிழகத்திற்கு‌ விமானங்கள் புறப்பட்டு சென்றன.

இந்நிலையில், 6ஆம் கட்டமாக தொடர்ந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டு வருகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் S$360,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – 5 பேர் கைது..!

அதே வேளையில், வரும் செப்டம்பர் 14ஆம் தேதிக்கு பிறகு வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு செல்லும் விமானங்களுக்கான புதிய இணையதள முன்பதிவுகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகச் சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு அரசின் பயண விதிமுறைகள் குறித்து விளக்கம் பெறும்வரை, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டு அரசுடன் இந்தியத் தூதரகம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படியில், வரும் 14ஆம் தேதி வரை விமானங்கள் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 6ஆம் கட்டத்தில், திருச்சிராப்பள்ளிக்கு அதிக விமானங்கள் செல்லவிருக்கின்றன. மேலும், சென்னை மற்றும் மதுரையும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தூதரகத்தின் புதிய அறிவிப்புகளை பெற தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

இதையும் படிங்க : உலகின் முதல் மிதக்கும் Apple ஸ்டோர் சிங்கப்பூரில்… திறக்கும் தேதி அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…