சிங்கப்பூரிலிருந்து 5ஆம் கட்டமாக தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டது. தற்போது அதற்கான புதுப்பிப்பு பட்டியலையும் தூதரகம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய, இந்திய குடிமக்களை மீட்க “வந்தே பாரத் மிஷன்” சிறப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 பாதித்த நபர்கள் சென்றுவந்த பொது இடங்களின் புதிய பட்டியல்..!
சிங்கப்பூரில் இருந்து இந்திய நாட்டிற்கு இந்த திட்டத்தின் கீழ் தொடர்ந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 5ஆம் கட்டமாக விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இதில் தமிழகத்திற்கு, சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் நான்கு பிரபல சந்தைகளில் நீக்கப்பட்ட கட்டுப்பாடு..!
பயணிகள் அனைவருக்கும் தமிழகம் சென்றதும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
#VandeBharatMission Phase 5 Schedule of flights from Singapore as of 10/08/2020
Selected pax will hear frm Mission/Airlines fr ticketing.
Please check for updates https://t.co/eREJFHx3GvNEW RELEVANT GUIDELINES https://t.co/Ni2i9L9WpG
More flights coming up pic.twitter.com/D1uh1J5s5q— India in Singapore (@IndiainSingapor) August 10, 2020
அதனை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களால் கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்க முடியாதவர்களுக்காக, தமிழக அரசு இலவச தங்குமிடங்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் மிக அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள்..!