ஸ்கூட் விமானத்தில் பயணிகளிடம் திருடிய வெளிநாட்டு ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வியட்நாமில் இருந்து சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் இருந்த மூன்று பயணிகளிடம் அவர் திருடியதாக முன்னர் பிடிபட்டார்.
லாரி ஓட்டுநருக்கு சிறை.. 8 ஆண்டுகள் வாகனம் ஓட்டத் தடை
இந்நிலையில், அவருக்கு நேற்று வெள்ளிக்கிழமை எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை “கொஞ்சம் அதிகம்” என்று ஆடவர் வாதிட்டார்.
Zhang Xiuqiang என்ற 52 வயதான சீன நாட்டவர் இந்த திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டார், மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியபோது, பயணிகள் கீழே இறக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தனர், அப்போது ஒரு சில பயணிகள் தாங்கள் எடுத்துவந்த பைகளில் இருந்து பணத்தை காணவில்லை என கூறினர்.
பைகளில் இருந்து ஆடவர் பணத்தை எடுத்ததை பார்த்ததாக சில பயணிகள் கூறியதை அடுத்து அவர் பிடிபட்டார்.
பின்னர் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் வந்த ஸ்கூட் விமானத்தில் 3 பயணிகளிடம் கைவரிசை காட்டிய வெளிநாட்டு பயணி