விபத்தில் சிக்கிய தனது மகனின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்த தயார் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.
அதன் பின்னர், முகமது அலிஃப் ரைகல் ஷாவின் தாயார் சித்தி சாரா ரஹீம் தொடங்கிய நிதி திரட்டும் முயற்சிக்கு சுமார் 1,800 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் நிதியளிக்க முன்வந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) காம்பாஸ் அவென்யூவில் 20 வயதான அலிஃப் விபத்தில் சிக்கினார். அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
அலிஃப்பின் தாயார் சாரா, S$100,000 இலக்குடன் தனது மகனுக்காக Give.asia இல் நிதி திரட்டும் ஏற்பாட்டை கடந்த வியாழக்கிழமை தொடங்கினார்.
அது ஒரு நாளுக்குள் அதன் இலக்கை எட்டியது, தற்போது வரை மொத்தம் S$233,763 நிதி திரட்டப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய அலிஃப், கடுமையான உட்புற இரத்தப்போக்கு மற்றும் இடது இடுப்பு முறிவுக்கு ஆளானார்.
அதோடு மட்டுமல்லாமல், விலா எலும்புகள் மற்றும் மணிக்கட்டு உடைந்தும், அவரது இடது முழங்கையில் துளை, பல காயங்கள் மற்றும் கிழிந்த உதடுகள் உட்பட பல காயங்களுக்கும் அவர் ஆளானார்.