மெரினா பே சாண்ட்ஸ் அருகே நீரில் மிதந்த இளைஞர் சடலம் – யார் அவர்?

man-21-floating-mbs
Shin Min Daily News & Unsplash

மெரினா பே சாண்ட்ஸ் அருகே நீரில் மிதந்த 21 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பிப்ரவரி 5-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் உடல் மிதந்ததை கண்டதாக சென் என்ற 45 வயது வாசகர் ஷின் மின் டெய்லி நியூஸிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம்

போலீசார் எதையோ தேடுவதை கண்டதாகவும், பின்னர் நீரில் உடல் மிதந்ததை கண்டுபிடித்தேன் என்றும் வாசகர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக சந்தேகம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட உடல் இறுதியாக மாலை 4:45 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டதாக சென் கூறினார்.

அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் உறுதி செய்து அறிவித்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?