மெரினா பே சாண்ட்ஸ் அருகே நீரில் மிதந்த 21 வயதுமிக்க ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிப்ரவரி 5-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் உடல் மிதந்ததை கண்டதாக சென் என்ற 45 வயது வாசகர் ஷின் மின் டெய்லி நியூஸிடம் தெரிவித்தார்.
போலீசார் எதையோ தேடுவதை கண்டதாகவும், பின்னர் நீரில் உடல் மிதந்ததை கண்டுபிடித்தேன் என்றும் வாசகர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக சந்தேகம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட உடல் இறுதியாக மாலை 4:45 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டதாக சென் கூறினார்.
அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ பணியாளர்கள் உறுதி செய்து அறிவித்ததை போலீசார் உறுதிப்படுத்தினர்.
விசாரணைகள் நடந்து வருகின்றன.