சிங்கப்பூரில் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை மீண்டும் மீறியதற்காக, ஒன்பது குற்றவாளிகள் தலா S$1,000 அபராதம் எதிர்கொள்ள உள்ளனர் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி (ஏப்ரல் 20) தெரிவித்துள்ளார்.
சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்கவில்லை.
இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து 3 நகரங்களுக்கு சில விமானங்களை மீண்டும் தொடங்க உள்ள ஜெட்ஸ்டார் ஆசியா..!
மேலும், 80 பேர் முகக் கவசம் அணியவில்லை என்றும் திரு மசகோஸ் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வருந்தத்தக்க செய்தியாக, இந்த குற்றங்களை இரண்டாவது முறையாக செய்ததற்காக 9 பேருக்கு, S$1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : COVID-19: 650,000 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வீட்டு பணியாட்களுக்கு இலவச முகக் கவசங்கள்..!