சிங்கப்பூர் தந்தை திரு.லீ குவான் யூவின் 100வது பிறந்தநாள் நினைவாக LKY100 நாணயங்கள் வெளியிடப்படும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், நாணயங்கள் வெளியான சில வங்கிகளில் வெறும் 30 நிமிடங்களுக்குள் தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
மூன்று வெவ்வேறு DBS வங்கிக் கிளைகளுக்கு சென்ற 72 வயதான திரு ஆண்டியப்பன், இறுதியாக வெறும் எட்டு $10 நினைவு நாணயங்களை மட்டுமே பெற முடிந்தது.
முதலில் பிஷன் கிளையிலும், பின்னர் பூன் கெங்கில் உள்ள டவுனர் ரோடு கிளையிலும் உள்ள DBS வங்கிக்கு டிசம்பர் 4-ம் தேதி காலையில் அவர் சென்றுள்ளார்.
பின்னர் அவர் DBS பிளாசா சிங்கபுரா கிளைக்குச் சென்றார், அங்கு அவர் கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்து மதியம் 1.40 மணியளவில் எட்டு நினைவு நாணயங்களை வெற்றிகரமாக வாங்கினார்.
சுமார் 142 வங்கிக் கிளைகளில் வரும் டிசம்பர் 4 முதல் 31 வரை பொதுமக்கள் LKY100 நாணயத்தை பெற்றுக்கொள்ள அறிவிப்பு முன்னர் வெளியானது.
அதாவது சுமார் 700,000 க்கும் மேற்பட்ட LKY100 நாணயங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று MAS தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.