சிங்கப்பூரில் பெண்களை குறிவைத்து 18 ஆண்டுகளாக தகாத படங்களை எடுத்துவந்த ஆடவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத் துறையை சேர்ந்த IT நிறுவன இயக்குநரான லீ லியன் ஷுவான், குறைந்தது 52 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்ததாக சொல்லப்பட்டுள்ளது.
விசா விண்ணப்பங்களுக்கு உதவி செய்ய தகாத சேவை.. சிக்கிய ICA அதிகாரி
இந்நிலையில், 49 வயதான அவர் நேற்று (டிச.14) 10 குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றார்.
இதே போன்ற மேலும் 42 குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவரால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அவருடைய சக ஊழியர்களாக வேலை பார்த்தவர்கள், 2017 மற்றும் 2018 க்கு இடையில் அவர்களை அலுவலகத்தில் வைத்து படமெடுத்தார் என கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள நபர்களை, 2002 மற்றும் 2020 க்கு இடையில் அவர் படம் எடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் அந்த படங்களை “சக ஊழியர்கள்” என்றும், “SG அலுவலக பெண்” என்றும் தலைப்பிட்டு சேமித்து வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து வந்த இந்த ஆசாமியின் லீலைகள் 2020 ஜனவரி மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. மெரினா பே லிங்க் மாலில் எஸ்கலேட்டர் படியில் சென்றுகொண்டிருந்த போது, பெண் ஒருவரை படம் எடுக்கும்போது சிக்கினார்.
சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?
கட்டுமான ஊழியர் மீது சட்ட நடவடிக்கை… கடலில் கழிவுகளை கொட்டிய காணொளி வைரல் – சிக்கிய ஊழியர்